19 வயதிற்குற்பட்ட 20/20 கிரிக்கெட் தொடர் மழையினால் நிறுத்தப்பட்டது!
tamil news: 19 வயதிற்குற்பட்ட இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் இன்றையதினம்(18.01.2025) ஆரம்பிக்கப்பட்டநிலையில் 16 அணிகள் விளையாடுகின்நிலையில் முதல்நாளில் 6 போட்டிகளை நடத்தத்திட்டமிட்டிருந்தாலும் மழை குறுக்கிட்டது.
போட்டி மழையால் தடைப்பட்டதுடன் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு இடையிலான போட்டி முடிவின்றிக் கைவிடப்பட்டது.
அத்துடன் நைஜீரியா மற்றும் சமூக அணிகளுக்கிடையிலான போட்டியும் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியும் மழையினால் கைவிடப்பட்டன.
அதாவது இம்முறை 19 வயதிற்குட்பட்ட் மகளிருக்கான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
ஸ்கொட்லாந்துக்கு இடையிலான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெற்றுக்களால் வெற்றியீட்டிய இதேவேளை நேபாளத்துக்கு இடையிலான போட்டியில் பங்களாதேஸ் அணி 5 விக்கெற்றுக்களால் வெற்றியீட்டியது.
நியுசிலாந்தும் தென்னாபிரிக்காவும் மோதிய போட்டியில் தென்னாபிரிக்கா 22 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
நடப்புச்சம்பியனான இந்தியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தொடரை முன்னின்று நடத்தும் மலேசியா போன்றன தொடரை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளாக காணப்படுகின்றன.
மேலும் இலங்கை மகளிர் அணி நாளை நடைபெறவுள்ள முதல் தொடரில் மலேசியாவை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
