இந்திய துணைத்தூதரகத்தில் 76வது குடியரசு தின நிகழ்வு இன்று!
tamil news: இன்றையதினம்(26.01.2025) இந்தியாவின் 76வது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் மருதடி வீதியிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்ற இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி தலைமையில் நிகழ்வுகளின் முன் தூதுவரால் இந்திய தேசிய கொடி ஏற்றிவைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து குடியரசுதின வாழ்த்து செய்தியினை யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி வாசித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்திய தேசபக்திப் பாடல்கள், நடனங்கள் மற்றும் கவிதைகள் என்பன ஆற்றப்பட்டன.
இந்திய தூதரக அதிகாரிகள், ஊடகவியாளர்கள், காற்துறையினர் மற்றும் இராணுவத்தினர் என பல தரப்பட்டவர்க் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்

