பிறந்து ஒரு நாட்களேயான குழந்தையின் சடலம் - யாழில் கொடூரம்!!!
tamil news: இன்றையதினம்(21.01.2025) காலை யாழ்ப்பாணம் கைதடி, தென்கிழக்கு மோக்கியவத்தை தோட்டக் கிணற்றில் இருந்து குழந்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குழந்தையை பிரசவித்துவிட்டு தாய் ஒருவர் பிறந்து ஒரு நாட்களேயான குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
இன்று காலை 9.30 மணியளவில் அங்கு சென்றிருந்த விவசாயிகள், காவற்துறையினருக்கு தெரிவித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சாவகச்சேரி காவற்துறையினர் சென்றுள்ளனர்.
மேலும் குழந்தையின் தாயாரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை சாவகச்சேரி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்

