வவுனியாவில் பயங்கரம்: மாமியாரை கொன்ற மருமகனுக்கு நடந்த சாவு!
tamil news: வவுனியா, சுந்தரபுரத்தில் நேற்றிரவு(24.01.2025) இளம் குடும்ப தலைவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
சுந்தரபுரம் பகுதியில் வசித்துவந்த சுந்தரலிங்கம் சுகந்தன்(வயது 28) ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த தீபாவளி தினத்தன்று தனது மாமியாரை துப்பாக்கியால் சுட்டுகொலை செய்த சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்றுவரும் நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.
மோட்டார்சைக்கிளில் நேற்றிரவு(23.01.2025) 11:30 மணியளவில் இவரது வீட்டுக்கருகில் வந்துகொண்டிருந்தபோதே கூரிய ஆயுதத்தால் இவர் கொலைசெய்யப்பட்டிருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவரது மைத்துநர் ஈச்சங்குளம் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் இக் கொலைச்சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


