வடக்கு மீனவர்களுக்கு காங்கேசன்துறை கடற்படையின் அவசர அறிவிப்பு!
tamil news: வடபிராந்திய இலங்கை கடற்படையினர் நாளை(17.01.2025)பருத்தித்துறைக்கடல்பிராந்தியத்தில் SLNS RanaWickrama கடற்படை கலத்திலிருந்து சூட்டுப்பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் மீனவர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை கரையோரக் காவற்படையின் வடபிராந்திய பணிப்பாளர், யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக அனைத்து கடற்தொழிற்சங்கங்களுக்கும் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
அதாவது,
நாளையதினம்(17.01.2025) காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை
23.2NM north east of ppd
Coordinate (s)of the location
09°55'N:080°42E
09°55N:080°36E
09°51N:080°42E
09°51N:080°36E.
ஆகிய கடற்பரப்புக்களிலேயே இவ்வாறு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

