மத்தியஸ்தசபையில் ஏற்பட்ட மோதல்; ஒருவர் உயிரிழப்பு!
tamil news: திஹகொட பகுதியில் மத்தியஸ்தசபைக்குச் சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திஹகொட, பெத்தங்கவத்தை விகாரையில் நேற்றையதினம்(25.01.2025) பிற்பகல் நடைபெற்ற மத்தியஸ்தசபை அமர்விலேயே இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் திஹகொட பகுதியில் வசிக்கும் 73 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன் கொலை தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்
