எதிர்க்கட்சிகளின் கூட்டு உள்ளுராட்சிமன்றங்களுக்கு நிதியுதவி இல்லையாம்! கொக்கரிக்கிறார் அமைச்சர்
tamil news:
"அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் திட்டங்களின் ஒருபகுதியாக உருவாக்கப்படும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு எந்தவிதமான நிதியுதவியும் வழங்கப்படமாட்டாது."
இவ்வாறு அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்தார்.
அந்த மன்றங்களில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பள செலவுகளை தவிர்த்து,
பிற செலவுகளுக்காக நிதி ஒதுக்கப்படமாட்டாது என அவர் கூறினார்.
அரசாங்கம் பிற செலவுகளுக்கு நிதி வழங்கும் நிலைமையில் இல்லை என்றும்,
இதுபற்றி தவறான எதிர்பார்ப்புகள் இருக்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் ஊழலில் ஈடுபடும் குழுக்களால் நிர்வகிக்கப்படும் மன்றங்களுக்கு நிதி வழங்குவதற்கு அரசாங்கம் இணங்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மக்கள் ஆதரவு இல்லாத சிறிய குழுக்கள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க முனைவது ஜனநாயக தத்துவத்திற்கு எதிரானது எனவும்,
அதற்கு மக்களின் அனுமதி இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை கொழும்பு மாநகரசபையின் மேயராக ட்ரோய் பல்தாசர் நியமிக்கப்படுவார் என அவர் உறுதியாக தெரிவித்தார்.

