கொழும்பு மாநகரசபை: எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு சிக்கலில்! சஜித் - ரணில் இடையில் பிளவு
tamil news:
கொழும்பு மாநகரசபையை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கைப்பற்றும் முயற்சி, தற்போது கடினமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதற்குப் முக்கிய காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கடும்போக்கு என கருதப்படுகின்றது.
இந்தத் தேர்தலில் அதிகமாக 48 ஆசனங்களைத் தானாக வென்ற தேசிய மக்கள் சக்தி(NPP) முதன்மை நிலையில் உள்ளது.
எனினும் மொத்தமாக 69 ஆசனங்களை எதிர்க்கட்சிகள் வென்றுள்ளதால் அவர்கள் ஒருமித்த அணியாகும் பட்சத்தில் மாநகர சபையின் அதிகாரம் அவர்களுக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தது.
இந்த சூழலில் ஐக்கிய மக்கள் சக்தி(SJB) தங்களது ஆதரவைத் தரக் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி(UNP) இடம் தெரிவித்திருந்தது.
ஆனால் சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையேயான கருத்து வேறுபாடுகள் இணைப்பை சாத்தியமற்றதாக மாற்றி உள்ளன.
இதனிடையே எதிர்க்கட்சிகள் இடையே ஒருமைப்பாடு ஏற்படாததால் நகரசபையின் நிர்வாகம் மீண்டும் தேசிய மக்கள் சக்திக்கே செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
