கொழும்பு பிரதான வீதியில் விபத்து; 7 பேர் காயம்!
tamil news:
சிலாபம்-கொழும்பு பிரதான வீதியில் உள்ள இனிகொடவெல ரயில் கடவையில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இன்றையதினம்(21.05.2025) காலை ஏற்பட்ட குறித்த விபத்தில் ஏழு பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இனிகொடவெல ரயில் கடவை மூடப்பட்டிருந்த வேளையில் இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
அந்நேரத்தில் ஒரு கொள்கலன் லொறி வந்து நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதுடன்,
வேனை கடந்துசென்று ஒரு பவுசர் மீது மோதியதால் வேன் பலத்த சேதமடைந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் சிலாபம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

